தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், தரமான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்களும் திறந்திருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பார்களுக்கு உடனடியாகச் சீல் வைக்கப்படும் என அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
