விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகாவின் அம்மா கமலா காவல் நிலையத்தில் சென்று ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருக்கின்றார். அதாவது ராதிகாவின் குழந்தையை அவர் தான் தள்ளிவிட்டு கொன்றுவிட்டார் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து காவல்துறையினர் வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விட்டனர்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து நிற்கின்றது. ஒரு பக்கம் தாத்தா பேரன் என அனைவரும் ஈஸ்வரிக்காக புலம்பி கொண்டிருக்கிறார்கள். அவரை எப்படியாவது வெளியில கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு கோபத்துடன் சென்று கதவை காலால் எட்டி உதைத்து திறக்கின்றார், ராதிகா ராதிகா என்று கூச்சலிடுகின்றார்.
பிறகு ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்த கோபி ராதிகாவின் அம்மா கழுத்தை நெரித்து சண்டையிடுகின்றார். ராதிகாவிடம் சண்டை போட்டு வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைக்கின்றார். இப்போது தான் கோபி உண்மையை பேசுகின்றார். ராதிகாவிடம் எப்பொழுது உன்னை பார்த்தேனோ? அப்போது இருந்து எனக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. கஷ்டப்பட்டு கொண்டு இருந்த உனக்கு நான் வாழ்க்கை கொடுக்க நினைத்தது தப்புதான்.
இதை கேட்ட ராதிகா நீங்கதான் வெட்கமே இல்லாமல் நான் தான் வேணும்னு என் பின்னாடியே அலைஞ்சிங்க என்று கூறுகிறார். இதை கேட்ட கோபி ஆமாம் அதுதான் நான் பண்ண பெரிய தப்பு, நீ கடனில் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தபோது உனக்கு ஆறுதலாக உனக்கு வாழ்க்கை கொடுக்க நினைத்தது தான் நான் செய்த முட்டாள்தனம் என்று கூறுகின்றார். அவருடைய அம்மாவையும் திட்டிவிட்டு என் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆனால் உங்கள் எல்லாம் சும்மா விட மாட்டேன்.
இனி உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார் .வெளியே போன கோபி நண்பரிடம் அம்மாவை நினைத்து புலம்புகின்றார். என் அம்மா எந்த கஷ்டத்திலும் என்னை கைவிட்டது கிடையாது. அவர்களை இந்த நிலைக்கு நான் ஆளாக்கி விட்டேன். இதெல்லாம் அவங்க உடம்பு தாங்காது, ஏதாவது ஆகிவிடுமானு எனக்கு பயமா இருக்கு, அவங்களால் மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிடாமல் இருக்க முடியாது.
அவங்க என்ன பண்ணுவாங்க என்று கூறி நண்பர்களிடம் புலம்பி தவித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ஜெயிலில் இருக்கும் ஈஸ்வரி மிகவும் அழுது கொண்டே இருக்கின்றார். இதை தொடர்ந்து கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் ஈஸ்வரி ராதிகா மற்றும் கோபிகா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்கும் விதமாக இருக்கின்றது. ஈஸ்வரி இனி ஜெயிலில் இருக்கப் போகின்றாரா இல்லை ஏதாவது செய்து வெளியில் வந்து விடுவாரா? என்பதை வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.