இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள பல கோடி வசூலை அள்ளிய வாடிவாசல்.. தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

By Nanthini on ஜனவரி 2, 2025

Spread the love

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு வருகின்றது. சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவருமே தங்களுடைய மற்ற படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க உள்ளார். தற்போது இருவருடைய தேதிகளுமே ஒருசேர அமையும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாடிவாசல் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. மூத்த எழுத்தாளர் செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி தான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று பாகங்களாக உருவாகும் சூர்யாவின் 'வாடிவாசல்' படம் | Suriya's ' Vaadivasal' to be made in three parts

   

அதில் சினிமாவுக்கு வேண்டிய விஷயங்களை வெற்றிமாறன் தன் பாணியில் எடுத்துள்ளார். தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தான் கதையின் மையக்களம். இதுவரை ஜல்லிக்கட்டுவை மட்டுமே பிரதானமாக வைத்து ஒரு படம் தமிழில் வெளியாகவில்லை. சூர்யாவின் கங்குவா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வரப்போகும் வாடிவாசல் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என தெரிகிறது.

   

Vaadivasal' producer Kalaippuli S Thanu reacts to the online speculations! - தமிழ் News - IndiaGlitz.com

 

 

இப்படியான நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு படத்தின் ஆடியோ ரைட்ஸ் குறித்து பேசி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ள நிலையில் ஆடியோ ரைட்ஸ் பத்து கோடி விற்பனை செய்து விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது பல நாட்களுக்கு முன்பு நடந்தது என்றும் அதுவே இப்போது விற்பனை செய்தால் பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.