BREAKING: மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

சென்னையின் மதுரவாயல் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதிமுக தொண்டர் ஒருவருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொருத்திய சைக்கிளில் வந்த நபர் ஒருவரை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் (SM) வேகமாகப் பரவி வருகின்றன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் (Election 2026) நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளிடையே நிலவும் இந்தத் தீவிரமான போட்டி மற்றும் மோதல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.