தமிழ் திரைப்பட கதை திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான ஆரூர் தாஸ் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த படங்களில் வேலையை பார்த்துள்ளார். இவர் சுமார் 500 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ஆரூர் தாஸ் வசனம் எழுதிய படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், தாய்க்கு பின் தலைமகன், வேட்டைக்காரன், தொழிலாளி உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தேவர் பிலிம்ஸ் தயாரிக்கும் பெரும்பாலான படங்களுக்கு ஆரூர் தாசன் வசனம் எழுதுவார். அப்படி எம்.எம்.ஏ சின்னப்பா தேவர் முதலில் வாழவைத்த தெய்வம் படத்திற்கு ஆரூர் தாசை வசனம் எழுத வைத்தார்.
அதன் பிறகு தேவர் பிலிம்சின் ஆஸ்த்தான கதை வசன ஆசிரியராக ஆரூர் தாஸ் மாறினார். எம்ஜிஆர் நடிப்பில் தேவர் பிலிம்ஸ் தயாரிக்கும் பெரும்பாலான படங்களுக்கு ஆரூர் தாஸ் தான் வசனம் எழுதுவார். ஆனால் எம்ஜிஆர் நடிப்பில் தேவர் ஃபிலிம் தயாரித்த தர்மம் தலைகாக்கும் படத்திற்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதவில்லை. அந்த சமயம் சின்னப்பா தேவருக்கும் ஆரூர் தாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தர்மம் தலைகாக்கும் படத்திற்கு அய்யாபிள்ளை தான் வசனம் எழுதினார்.
இது பற்றி முதலில் எம்ஜிஆருக்கு தெரியாது. படத்தின் ஷூட்டிங் நடந்தபோதுதான் எம்ஜிஆர் ஆருள்தாஸ் வசனம் எழுதவில்லை என்பதை அறிந்தார். இதனை அடுத்து எம்ஜிஆரை ஆரூர்தாஸ் ஒருமுறை சந்தித்தார். அப்போது ஏன் படத்திற்கு நீங்கள் வசனம் எழுதவில்லை. குடும்பத்தலைவன் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு பலமுறை என்னை பார்த்தீர்கள். ஆனால் ஏன் இந்த விஷயத்தை கூறவில்லை என எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ஆரூர் தாஸ் எனக்கும் சின்னப்பா தேவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது.
உங்களிடம் சொன்னால் நீங்கள் சமாதானப்படுத்தி அதன் பிறகு தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படங்களுக்கு வசனம் எழுதுவதை நான் விரும்பவில்லை. இப்போது நான் சுதந்திர மனிதனாக உணர்கிறேன் என கூறியுள்ளார். உடனே எம்ஜிஆர் இன்னும் எத்தனை நாட்கள் நீங்கள் சுதந்திர மனிதராக இருக்கிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். முடிவில் எம்ஜிஆர் சொன்னது தான் நடந்தது. தர்மம் தலைகாக்கும் படத்திற்கு பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரித்த நீதிக்குப் பின் பாசம் படத்திற்கான வசனத்தை ஆரூர் தாஸ் எழுதியுள்ளார்.