தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கலை திருவிழா போட்டிகள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 25 கரூர், 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 26 கிருஷ்ணகிரி, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சேலம், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
