இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
இதனால் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு பிரஷர் கொடுத்து வரும் நிலையில் தற்போது இந்த விவகாரமும் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
