அங்காடி தெரு பட நடிகர் மகேஷ் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Archana

Published on:

தமிழில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அங்காடி தெரு.

   

இந்த திரைப்படம் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றும் வறுமையான கிராமத்தை இளைஞர்கள் படும் கஷ்டத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருந்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் புதுமுக நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தான் நடிகர் மகேஷ்.

அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதன் பிறகு இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்பாக அளித்த ஒரு பேட்டியில், தான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னபோது யாருமே நம்பவில்லை.

அங்காடித்தெரு போஸ்டர்கள் ரிலீசான பிறகு தான் அனைவரும் நம்பினார்கள். எனக்கு முன்பே சினிமாவுக்கு அஞ்சலி வந்து விட்டதால் அவரிடம் நடிப்பு பற்றி கேட்டேன்.

படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எனக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு சினிமாவுல ஸ்டெடியால் நிற்பதற்கு என்ன செய்யணும் என்று எனக்கு சொல்வதற்கு யாரும் இல்லை.

அதனால் என்னை தேடி வந்த நல்ல கதைகளை தவறவிட்டேன். அதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தில் நடிப்பதற்கு டைரக்டர் முதலில் என்னை தான் கேட்டார்.

அதனைப் போலவே சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நடிப்பதற்கு எனக்கு தான் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி பல திரைப்பட வாய்ப்புகளை நான் தவற விட்டேன் என்று மனமுடைந்து பேசினார்.

தற்போது இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ள நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana