இசையை பின்புலமாகவும், குரல் வளத்தை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சி அளித்து வருபவர் தான் அனந்த் வைத்தியநாதன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் ஒருவராக கலந்து கொண்டார். தற்பொழுது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ஒரு சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆரம்பத்திலிருந்து கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் முதல் சீசனில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இரண்டாவது சீசனில் பங்கேற்ற இவர் இரண்டாவது போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு மறக்க முடியாத நினைவு என்றும், மனதளவில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார் .எந்த ஒரு டெக்னாலஜியும் பயன்படுத்தாமல் வீட்டிற்குள் ஒரு மன சம்பந்தப்பட்ட விளையாட்டு தான் பிக் பாஸ் என்றும் கூறியிருந்தார் அனந்த் வெங்கட்ராமன்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் பிரபலம் அடைந்து விடலாம் என்று சிலர் நினைப்பதெல்லாம் பொய் .அத்தகைய நினைப்பை நாம் எடுத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நமக்குள் திறமை இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு உழைப்போடு நாம் பயணம் தொடர்ந்தால் மட்டும்தான் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பிக் பாஸில் வெற்றி பெற்றவர்கள் யாராவது நல்ல நிலையில் இருக்கிறார்களா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்த பின்னர் மக்கள் அவர்களை மறந்து விட்டன.ர் தற்பொழுது பிக்பாஸில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கூட இதை மனதில் வைத்துக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.