தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருந்தார்.
அங்கு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர வேண்டும் என கூறி இபிஎஸ்க்கு அமித்ஷா அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு (ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி கே வாசன் உள்ளிட்டோர்) 56 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் மூன்று இடங்களை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டுமென அமித்ஷா கூறினாராம். இதைக் கேட்டு அதிர்ந்து போன ஈபிஎஸ் அந்த கோரிக்கையை உடனே நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
