ஆபத்தில் உதவிய காங்கிரஸ்.. சி.வி.சண்முகம் சீட்டை தூக்கிக் கொடுக்கும் முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்….!

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கு வரும் ஜூன் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் அண்மையில் நடந்த மயிலம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடத்தை நிரப்பவே தற்போது இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும், போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 18 அன்றே வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பெரும்பான்மைக்குச் சில இடங்கள் குறைவாக இருந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏ-க்களின் ஆதரவை உடனடியாக வழங்கி விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க முதற்புள்ளி இட்டது. அதனைத் தொடர்ந்து இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. இந்த பலத்தின் அடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவது உறுதி என்ற சூழல் நிலவுகிறது.

தற்போது கூட்டணி கட்சிகளின் தயவுடன் தவெக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதால், இந்த எம்பி சீட்டை தங்களுக்குப் பேருதவி புரிந்த கூட்டணி கட்சி ஒன்றுக்கே விட்டுக் கொடுக்க விஜய் யோசித்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, தவெக ஆட்சி அமைக்கத் திணறிக்கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் முதலில் வந்து கைகொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கலாம் என்று தவெக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

அதிலும் முக்கியமாக, காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கூட்டணி அமைய அடித்தளமாக விளங்கியவரும், இரு கட்சிகளையும் இணைத்த ‘அச்சாரம்’ என்று போற்றப்படுபவருமான காங்கிரஸின் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த பதவியை வழங்கினால் மிகச் பொருத்தமாக இருக்கும் எனத் தவெக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. கைம்மாறாகவும், எதிர்காலக் கூட்டணியை மேலும் பலப்படுத்தவும் கதர் சட்டையினருக்கு இந்த எம்பி பதவியை விஜய் விட்டுக் கொடுத்தால், அது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

“தனி அறையில் இருந்த சிறுமி”… அந்தரங்க உறுப்புகளை தொட்டு முத்தமிட முயன்ற Boxing coach… விளையாட்டு உலகையே உலுக்கிய கொடூரம்…!

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற காண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் தனியார் குத்துச்சண்டை கிளப்பில், 17 வயது இளம் வீராங்கனைக்கு…

3 minutes ago

லாரியில் வைத்து சிறுமியை சீரழித்த அண்ணன் – தம்பி… மனைவியே கூட்டிக்கொடுத்த கொடூரம்… கணவனுக்கு மனைவி செய்யும் காரியமா இது…?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, ஓடும் லாரியில்…

7 minutes ago

என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க!”… காதலியின் வீட்டின் முன் பிணமாகக் கிடந்த காதலன்… கதறும் பெற்றோர்.. ராஜஸ்தானில் அரங்கேறிய ஆணவக் கொலை”..!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி…

11 minutes ago

நடுரோட்டில் சட்டையை பிடித்து குப்பைத் தொட்டியில் வீசிய டிரம்ப்! அமெரிக்க அதிபரின் பகீர் AI வீடியோ.. உலகளவில் பெரும் அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை…

16 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் காட்சி..! நடுவானில் 245 அடி உயரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்.. படிக்கட்டில் நடுங்கியபடி கீழே இறங்கிய மக்கள்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற 'சிக்ஸ் பிளாக்ஸ் ஓவர் டெக்சாஸ்' பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட திடீர் மின்சார முறிவு,…

23 minutes ago

“ஒளிரும் எல்லை.. வழியும் கண்ணீர்! நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் பார்டரை படம் பிடித்த பைலட்.. ‘இது வலியின் எல்லை’ என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!

பாதுகாப்புப் படைகள், அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், வான்வெளியில் இருந்து…

31 minutes ago