விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை சினேகா!…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சரியான பதிலடி!… வைரலாகும் பதிவு இதோ!…

By Begam

Published on:

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தனது அழகான புன்னகையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘புன்னகை அரசி’ என்று அழைக்கின்றனர்.

   

சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான், ஆத்யந்தா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்தைத் தொடர்ந்து இவர் நடிக்க மாட்டார் என்று எண்ணிய நிலையில், தனது உடல் எடையை வெகுவாக குறைத்து சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த வகையில் இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘பட்டாசு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சினேகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை சினேகா பிரசன்னா தம்பதியினர் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரியப் போவதாக சில தகவல்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனால் ‘இது உண்மை இல்லை வெறும் வதந்தி தான்’ என்றும், ‘அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும் பிரசன்னா  கூறியிருந்தார்.

தற்பொழுது நடிகை சினேகா இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து ரொமான்டிக் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.