80 மற்றும் 90களில் தமிழ், மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சார்மிளா. இவர் தமிழில், கிழக்கே வரும் பாட்டு, உன்னை கண் தேடுதே, புழல், கன்னிராசி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் ஷர்மிளா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்ய அது விவாகரத்தில் முடிந்துள்ளது, பிறகு ராஜேஷ் என்ற இன்ஜினியரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் பிரச்சனை காரணமாக பிரிந்தனர்
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், மலையாளப் படங்கள் குறித்து மக்கள் பேசும்போது, A-சான்றிதழ் பெற்ற படங்களும் அவற்றின் போஸ்டர்களும் தான் நினைவுக்கு வந்தன. அவர்களுக்குப் பொழுதுபோக்கு என்றால், போதைப்பொருட்களும், பெண்களும்தான், அதனால்தான் அந்தக் காலத்தில் அந்த படங்கள் பிரபலமாக இருந்தன என்று கூறியுள்ளார்.
