“அந்த படம் எடுத்தப்போ 10-ஆம் வகுப்பு தான் படிச்சேன்”.. ராஜ்கிரணால் தினமும் அழுதேன்.. நடிகை சங்கீதா ஓபன் டாக்..!!

By Priya Ram on அக்டோபர் 15, 2023

Spread the love

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் சங்கீதா. ஒரு சில திரைப்படங்களில் நடித்து சங்கீதா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். முதலில் சங்கீதாவுக்கு என் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதிலும் பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு மட்டும் இல்லாமல் சங்கீதாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

   

சமீபத்தில் நடிகை சங்கீதா அளித்த பேட்டியில் கூறியதாவது, எல்லாமே என் ராசாதான் படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆகிய போதே பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகரிக்க சொன்னார்கள். அப்போது நான் பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். ராஜ்கிரண் சார் எனக்கு ஜோடி என்பதால் உடல் எடையை அதிகரித்த பிறகு தான் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

 

தினமும் ராஜ்கிரண் ஆபீஸில் இருந்து வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமான சாப்பாடுகள் வரும். அதிகமாக சாப்பிட வேண்டும் என என்னை கட்டாயப்படுத்தினார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு அழுது கொண்டே தான் சாப்பிட்டேன். என் அப்பா, அம்மா சொல்லி நான் கேட்டதில்லை. ஆனால் ராஜ்கிரண் சாருக்கு பயந்து கொண்டே சாப்பாடுகளை அதிகமாக எடுத்துக் கொண்டேன் என சங்கீதா கூறியுள்ளார்.