கௌதம் மேனன் படத்துல ஹாரிஸ் இசையில இந்த ஹிட் பாடலை எழுதியது நடிகை ரோகினியா?… பலரும் அறியாத ஆச்சர்யத் தகவல்!

By vinoth on டிசம்பர் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு நகர்ப்புற உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. தன்னுடைய சில ஹிட் படங்களை அவர் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தார்.

   

இவர் படங்களில் இளைஞர்களைக் கவரும் அம்சமாக அமைந்தவை அழகான பாடல்கள். இவரும் ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து பணியாற்றிய பல படங்களின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.அந்த படங்களில் பெரும்பாலான பாடல்களை பாடலாசிரியர் தாமரை எழுதினார்.

   

 

ஆனால் அரிதான ஒரு சில பாடல்களை வேறு சிலரும் எழுதியுள்ளனர். அப்படி கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்ற ‘உனக்குள் நானே உருகும் இரவில்’ பாடலை எழுதியவர் நடிகர் ரோகினி என்பது பலரும் அறியாதது. இந்த படத்தில் மட்டும் இல்லாமல் வில்லு, முன் தினம் பார்த்தேனே, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல படங்களில் கவித்துவமான பாடல்களை ரோகினி எழுதியுள்ளார். ஆனால் அந்த பாடல்கள் வெற்றிபெற்றும் அதை எழுதியது அவர்தான் என்பது பலரும் அறியாமல் போய்விட்டது.

என்ன காரணத்தினாலோ அவர் தொடர்ந்து பாடல்கள் எழுதாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.