‘ஒஸ்தி”மயக்கம் என்ன’ படம் நடிகை இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?.. கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள்…

By Samrin

Published on:

தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஒஸ்தி’. இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.இப்படத்தில் சிலம்பரசன்,சந்தானம், ஜித்தன் ரமேஷ் ,சரண்யா , நாசர், ரேவதி, நிழல்கள் ரவி, மயில்சாமி, தம்பி ராமையா போன்ற பல பிரபலகள் இப்படத்தில் நடத்துள்ளனர்.

   

இப்படத்தில் நெடுவாளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்.  இவர் புது டெல்லியை பூர்விகமாக கொண்டவர்.2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர்.

இவர் ஒரு சில  விளம்பரங்களில் நடித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு  வெளியான ‘லீடர்’ என்ற தெலுங்கு  படத்தின் மூலமாக அறிமுகமானார்.பின்பு ‘நாகவல்லி’ மற்றும் ‘மிரபகாய்’ படத்தில் மூலமாக தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகை ரிச்சா கங்கோபத்யாய்  நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘மயக்கமென்ன’’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்தார்.அதன் பிறகு  எம் பி ஏ படிப்பதற்காக லண்டன் சென்றார்.அங்கு உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ படித்து பட்டம் பெற்றார்.

வாஷிங்டனில் உள்ள புனித லூயிஸ் ஓலின் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் வேலையும் பார்த்து வருகிறார்.நடிகை ரிச்சா கங்கோபத்யாய் வெளிநாட்டைச் சார்ந்த ஜோ என்பவரை காதலித்து   திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் இந்திய முறைப்படியும் ,கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு  ‘லூகா’ என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் குடும்ப புகைப்படம்  இணையத்தில் வெளியாகி படு  வைரலகி வருகிறது  .