கடந்த பல ஆண்டுகளாக நடிகை நமீதா சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். பாஜகவிலும் முக்கிய பொறுப்பில் நமீதா இருந்து வருகிறார். இந்நிலையில் தேனியில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை நமீதா சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது நமீதா கூறியதாவது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு எனக்கு விருப்பம் தான். ஆனால் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போல காலம் கடந்தும் நம்மைப் பற்றி பேச வைக்கும் படமாக, கேரக்டராக அது இருக்க வேண்டும்.
பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு அதுபோன்ற சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.
