‘வழக்கு எண் 18/9’ படத்தில் பள்ளி மாணவியாக வந்த இவங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா.. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…

By Archana

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகள் பலரும் உள்ளனர்.

   

அப்படி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் மனிஷா யாதவ்.

இவர் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகுஒரு குப்பை கதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

அதாவது ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்து அசத்தினார்.

மேலும் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்தப் படத்திற்குப் பிறகு இவரை பலரும் சொப்பன சுந்தரி என்று அழைக்க தொடங்கினர்.

இது ஐட்டம் பாடல் என்று முன்பே என்னிடம் அவர்கள் சொல்லவில்லை என வெங்கட் பிரபு மீது மனிஷா யாதவ் புகார் கூறியதும் சில நாட்கள் பரபரப்பை கிளப்பியது.

இதனிடையே இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ட்ரீட் என்ட்ரி கொடுத்த இவரின் நடிப்பு சரியாக செல்ப் எடுக்கவில்லை.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana