சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய நடிகை மாளவிகா மோகனன்…. இத்தனை கோடியா?… அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்…

By Begam

Published on:

நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது தான் நடிக்கும் திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகன் 2013ல் மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்தார்.இதைத் தொடர்ந்து இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

   

குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார். இவர் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தற்பொழுது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும். ஆனால் இவரின் படங்கள் எதுவும் சரியாக ஹிட் ஆகவில்லை. ஆனாலும் இவர் சம்பள விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராம். இவரை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தனது புதிய படத்திற்கு கமிட் செய்ய சென்ற பொழுது அவர் தனது சம்பளத்தை கோடிகளில் கேட்டாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் இவரை ஒப்பந்தம் செய்யலாமா வேண்டாமா? என யோசித்து பின் வாங்கி விட்டனர் என்ற தகவல் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.