Categories: CINEMA

என்ன ஏத்துக்கிட்டா உங்களுக்கு நாய் மாறி இருப்பேன்னு சொன்னாங்க.. நடிகை லட்சுமி குறித்து பகிர் கிளப்பிய முன்னாள் கணவர்..

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் மொழி இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகை லட்சுமி அவர்கள் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபல நடிகர் மோகன் சர்மா என்பவரை 1975 ஆம் ஆண்டு காதலித்து நடிகர் லட்சுமி திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு இருவரும் சேர்ந்து கூட படத்தில் நடித்திருக்கிறார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

கடைசியாக இவர் நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் லட்சுமியின் முன்னாள் கணவரும், நடிகருமான மோகன் சர்மா அவர்கள் பேட்டி ஒன்றில் லட்சுமி உடன் ஏற்பட்ட காதல் முதல் பிரிவு குறித்து கூறி இருந்தது, நாங்கள் முதன் முதலில் சந்தித்தது சட்டக்காரி என்ற படத்தின் போது தான். அப்போது என்னுடைய பெற்றோர்கள் மும்பையில் இருந்தார்கள். நான் சூட்டிங்கிற்காக சென்னை வந்து செல்வேன். பின் ஒருநாள் நான் மும்பையில் இருந்தபோது லட்சுமி எனக்கு போன் செய்து, நான் லக்ஸ் சோப் விளம்பரத்துக்காக வந்திருக்கிறேன்.

கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு வர முடியுமா? என்று கேட்டார். நானும் அவரை பிக்கப் செய்து அவர் சொன்ன இடங்களுக்கு எல்லாம் ஷாப்பிங் கூட்டி சென்றிருந்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட கடையில் அவர் சென்ட் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு பாட்டிலை எடுத்து விலை என்னவென்று கடைக்காரரிடம் கேட்டேன். அவர் ₹500 என்று சொன்னதும் நான் வைத்து விட்டு வந்து விட்டேன். ஆனால், அதை அவர் வாங்கி எனக்கு கிப்டாக கொடுத்து, எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாய் மாதிரி இருப்பேன் என்று சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் எனக்கு உலகமே நின்று விட்டது. என்ன பதில் சொல்லணும் என்று எனக்கு தெரியவில்லை. முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண் காதலை சொன்னார் என்றால் அது லட்சுமி தான். நான் லட்சுமி சொன்ன வார்த்தையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டேன். இதனால் இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் கால் செய்து அவரிடம் நடந்ததை சொன்னேன். உடனே லட்சுமி, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். ஆனால், நான் என்னுடைய கேரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை என்று சொன்னேன்.

உடனே அவர் ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். அவர் என்னை எதற்கு அழைத்தார் என்று புரிந்து விட்டது. பின் லட்சுமி இடம் நான், கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்தவன். திருமணம் செய்யாமல் எதுவும் உங்களுடன் நான் செய்ய மாட்டேன். குங்குமம் இருந்தால் கொடுங்கள் என்று சொல்லி அவருடைய நெற்றியில் வைத்துவிட்டேன். அதற்கு பிறகு தான் எங்களுடைய முதல் அனுபவம் ஏற்பட்டது. அன்று முதல் இரவில் நாங்கள் கணவன் மனைவியாகிவிட்டோம். சென்னை வந்ததும் வழக்கறிஞர் மூலம் ஊடகங்களில் சொல்லி கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்த லட்சுமி சிவச்சந்திரன் என்பவரை தீர்மானம் செய்து கொண்டார். இப்போது லட்சுமியின் முதல் கணவர் மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Deepika
Deepika

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago