பொது இடத்தில்… குழந்தையை கையில் வைத்துக்கொண்டு… கணவருடன் எல்லை மீறிய நடிகை காஜல்!… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொது இடத்தில் எல்லை மீறிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.

   

இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சலு  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. தனது மகனுக்கு நீல் என்று  வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இணைந்து தாய்வானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது மகனை கையில் வைத்து இருக்கும் கணவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பொது இடத்தில் இப்படியா நடந்துக்குவீங்க?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த ரொமான்டிக் புகைப்படம்…..