விழா ஒன்றுக்கு உடல் தெரிய உடை அணிந்து வந்த நடிகை பாவனா…. சர்ச்சைக்கு கோபத்துடன் சரியான பதிலடி…. வைரலாகும் வீடியோ…

By Begam

Updated on:

நடிகை பாவனா துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு உடல் தெரியும் படியான உடை ஒன்றை அணிந்து சென்றுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகை பாவனா மேனன் கேரளாவை சேர்ந்தவர். இவர் ‘சித்திரம்  பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகியது.

   

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்சமயத்தில்  இவருக்கு யூ ஏ இ சர்வீஸ் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை பாவனா துபாய்க்கு சென்று இருந்தார். அப்பொழுது அவர் அணிந்திருந்த உடை குறித்து பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் இணையத்தில் வெளியானது.

நடிகை பாவனா தனது கையை உயர்த்தும் பொழுது உடல் தெரிவது போல இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பினார்கள் நெட்டிசன்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பாவனா. ‘வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நான் இல்லை. கையை தூக்கும் பொழுது தெரிந்தது என் உடல் அல்ல, என் உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் டாப் தான்.’ என்று அவர் மிக கோபத்துடன் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar