தவறான உறவில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி!… இது உண்மை தானா?… கேள்வி எழுப்பும் நெடிசன்கள்!…

By Begam

Published on:

நடிகை அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதோடு மட்டுமில்லாமல் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.

   

இதைத்தொடர்ந்து அங்காடி தெரு இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வொன்றாக ஹிட் கொடுக்க தற்பொழுது இவர் தமிழில் முன்னணி நடிகையாக மாறத் தொடங்கியுள்ளார்.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில்  வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கும் நடிகர் ஒருவருக்கும் காதல் ஏற்பட விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்கள் தற்போது பிரிந்து தங்களது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி, டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என வெளியே வந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்தநெட்டிசன்கள் ‘இது உண்மை தானா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.