சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் செய்த செயல்!!…. வைரலாகும் வீடியோ இதோ!!…

By Begam

Published on:

நடிகர் விக்ரம் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘சீயான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் திரையுலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணி நடிகராக தற்பொழுது வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

   

தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என பலவிருதுகளுக்கு  சொந்தக்காரரும் ஆவார். ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் சேது, சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், சாமி, அருள், அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘கோபுரா’. இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் செவன் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….