போன்லயே எல்லாம் முடிஞ்சிருச்சு.. ஒத்த வார்த்தை கூறி பாத்திமாவை திருமணம் செய்த விஜய் ஆண்டனி.. இப்படி ஒரு காதல் கதையா..??

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

இதனிடையே விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா, லாரா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் மீரா சமீபத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி தன்னுடைய காதல் திருமணம் குறித்து பேசி உள்ளார். சுக்ரன் படம் ரிலீஸ் ஆன போது பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார். செல்லமணி நேரம் அவரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தேன்.

அப்போது அவர் சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தார். என்னுடைய அம்மாவுடன் அவர் மிகவும் எளிமையாக பேசினார். அப்போது அவரை காதலிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அவரின் வீட்டிற்குச் சென்று உங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தா அதுல என் பெயரை சேர்த்திடுங்க என்று சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அதில் அவருக்கு என்னை பிடித்தது தெரியவந்தது என தனது காதல் திருமணம் குறித்து விஜய் ஆண்டனி கலகலப்பாக பேசினார்.

author avatar
Nanthini