‘அப்பா என்னை அந்த படத்துல நடிக்க விடல’… மனம் திறந்து பேட்டியளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது ‘வாரிசு’ திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தையாக நடித்து அசத்தியுள்ளார்.

   

மேலும் ,பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். இவர்களில் வரலக்ஷ்மி சரத்குமார் தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகில் வலம்  கொண்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்குப்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2 என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ‘பாய்ஸ் திரைப்படத்தில் வரும் நடிகை ஜெனிலியாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில்  தான் தேர்வு செய்யப்பட்டதாகவும், தனது அப்பா தன்னை நடிக்க விடவில்லை’ என்றும் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அவரின் வைரல் பேட்டி….