கிளியைத்தான் தூக்கிட்டீங்க.. உங்களுக்கு தில்லுருந்தா இதை தூக்கிட்டு போங்க பாக்கலாம்.. மேடையில் சவால்விட்ட ரோபோ ஷங்கர்.. 

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ரோபோ சங்கர் மீது வனத்துறை சார்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. விதிமுறைகளுக்கு மீறி அவரது வீட்டில் வெளிநாட்டு கிளிகள் இரண்டை வளர்ப்பதாக சங்கர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. ஆனால் ரோபோ சங்கருக்கு அந்தக் கிளிகள் இரண்டும் கிஃப்ட்டாக கொடுக்கப்பட்டவை.

அதனால் அந்த விதிமுறைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாததால் வீட்டில் வளர்த்து அதை தன் யுடியுப் சேனலில் வீடியோவாக பதிவு செய்தார். அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கிளிகளை பறிமுதல் செய்து அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். வேண்டுமென்றே செய்திருந்தால் கண்டிப்பாக சங்கருக்கு சிறைத் தண்டனை கிடைத்திருக்கும். அதன் பின் 2.50 லட்சம் அபராதம் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் கல்லூரி விழா மேடை ஒன்றில் பேசிய ரோபோ சங்கர் ‘கிளிகளை வளர்த்தேன், ஒரு கிளியை வளர்த்தது தப்பா? என் வீட்டில் இன்னும் ஒரு சில பிராணிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என அவரது மனைவியையும் மகளையையும் குறிப்பிட்டு சொன்னார். தில்லிருந்தா வந்து தூக்கிட்டு போங்க என்று சொல்ல அனைவரும் சிரித்துள்ளனர்.