அட.. இவுங்க தான் நடிகர் பிரசாந்தின் அம்மாவா?… இதுவரை யாரும் பார்த்திடாத UNSEEN  புகைப்படம் உள்ளே…

By Begam

Published on:

நடிகர் பிரசாந்த் தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990 இல் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடித்த படங்களில் கண்டிப்பாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் இருக்கும் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றே.

   

முன்னணி நாயகனாக இருக்கும் பொழுதே நடிகர் பிரசாந்த் தனது அம்மா அப்பா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை அவ்வளவு இனிதாக அமையவில்லை. குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி இப்பொழுது தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் பிரசாந்த் சினிமாவில் மற்றும் சில பேட்டிகளில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார்.

ஆனால் அவரது அம்மாவை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். நடிகர் பிரசாந்தின் அப்பாவை நமக்கு தெரியும். ஆனால் அவருடைய அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தற்பொழுது நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவர் அம்மா உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…