‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன்… நடிகர் கார்த்தியின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபலமான நடிகராக திகழும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி.

   

தனது தந்தையைப் போலவே இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகின்றன.

இதில் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதனைப் போலவே இளைய மகனான கார்த்தி சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் சினிமாவின் இளம் நாயகனாக வளர தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் மற்றும் கைதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இறுதியாக பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. நடிகர் கார்த்திக் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்களின் சம்மதத்துடன் கோவையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு உமையாள் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பிறகு பல வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அதனை மகிழ்ச்சியாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் தனது மகனுக்கு கந்தன் என்று முருகப்பெருமானின் பெயரை கார்த்தி வைத்துள்ளார்.

தற்போது நடிகர் கார்த்தியின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.