Connect with us

மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா செய்த வேலை.. பதறிப்போன நடிகை அஞ்சலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

CINEMA

மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா செய்த வேலை.. பதறிப்போன நடிகை அஞ்சலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

 

‘கேங்க் ஆப் கோதாவரி’ என்ற படத்தின் நிகழ்ச்சியின் போது நடிகர் பாலகிருஷ்ணா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதை தாண்டிய போதிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.

   

இவரது படங்களில் பெரும்பாலும் லாஜிக் என்பதை இருக்காது. அதனையும் தெலுங்கு ரசிகர்கள் ரசிப்பதால் இவரது பாடம் எப்போதுமே நல்ல வரவேற்பை கொடுக்கும். அதிலும் ஒற்றை விரலால் ரயிலை நிறுத்துவது, காரை எட்டி உதைத்து அனுப்புவது போன்ற அட்ராசிட்டிகளை செய்து பிரபலமாகி இருக்கிறார் பாலகிருஷ்ணா. இதன் காரணமாக இவர் நடிக்கும் படங்கள் பல ட்ரோல்களில் இருக்கும்.

இப்படி ஒரு புறம் இருக்க அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது இவரது வழக்கம். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசித்ரா பாலகிருஷ்ணா படத்தில் நடித்த போதுதான் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக ஓப்பனாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார். இதனை பார்த்த பலரும் இவர்தான் அவரா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது கேங்க் ஆப் கோதாவரி என்கின்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். இந்த படத்தில் அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகிய பல நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த விழாவின்போது மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கு நின்று கொண்டிருந்த அஞ்சலி நேகா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்கச் சொல்லி கூறினார்.

ஆனால் அதை கவனிக்காமல் நேகா செட்டியும், அஞ்சலியும் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி பின்னர் சுதாகரித்து நிலையாக நின்றார். அவர் செய்ததை பார்த்த பலரும் ஷாக்காகினாலும் அஞ்சலி சிரித்துக் கொண்டுதான் இருந்தார்.

இருந்தாலும் பொது நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொள்வது மிகவும் அநாகரீகமான விஷயம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நடிகை அஞ்சலி இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அவர் செய்தது மிகவும் தவறான செயல் என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by oknewsupdates (@oknewsupdates)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top