கவர்ச்சி பொங்க புடவை அணிந்து….  தத்துவம் சொன்ன ‘சுந்தரி’ சீரியல் நடிகை… அடடா இப்படி ஒரு தத்துவமா?…. திகைத்துப் போன ரசிகர்கள்…

By Begam

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. கிராமத்து பெண் போன்ற குரலில் பேசி ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

   

படிப்படியாக வளர்ந்து தற்பொழுது பிரபல சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சுந்தரி சீரியல் இவர் தனது  எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் ஃபாலோவர்ஷ் உள்ளனர்.

கருப்பு நிறத்திற்கு தனி அழகை கொடுத்தவர். சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளி திரையிலும் நயன்தாரா  நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐரா’ படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கேப்ரில்லா. இவர் தற்பொழுது ஜாக்கெட்ட அணியாமல் நடத்திய கவர்ச்சி  புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் ‘எனது ஆடையை வைத்து தான் எனது குணத்தை மதிப்பிடுவாய், என்றால் அத்தகைய தேர்வில் நான் தோற்றாலும் மகிழ்ச்சியே’ என்று தத்துவத்தையும் பதிவு செய்துள்ளார். இவ்வாறு தனது புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு தத்துவங்களையும் பதிவு செய்து இணையத்தை கலக்கி வருகிறார் நடிகை கேப்ரில்லா.