கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்குப் போதை மருந்து கொடுத்து, 10 பேர் கொண்ட கும்பல் பண்ணை வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருக்கும் காணொளி ஒன்று வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகப் பரவிய பிறகே ஜூன் 8 அன்று வெளியில் தெரியவந்துள்ளது. இந்தக் காணொளி இணையத்தில் பரவுவதைக் கிராம மக்கள் மூலமாக அறிந்த பாதிக்கப்பட்ட பெண், உடனடியாகக் காவல் நிலையத்தை அணுகிப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் குடும்பச் சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறித் தனது கிராமத்தை நோக்கி நடந்து சென்றபோது, அவருக்கு உதவுவதாகக் கூறி இரண்டு நபர்கள் அணுகியுள்ளனர். அவர்கள் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, அந்தப் பெண் சுயநினைவை இழந்தவுடன் ஒதுக்குப்புறமான ஒரு பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே கூடியிருந்த பல ஆண்கள், அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமின்றி, அதனைத் தங்களது கைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளாகவும் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறர் அந்தரங்கத்தைப் பார்ப்பது , குற்றக் கும்பலின் கூட்டுப் பொறுப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் பசவபட்டணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 10 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதோடு, இந்த ஆபாசக் காணொளி எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதைக் கண்டறியக் குற்றவாளிகளின் கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…
நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…