15 கோடி, 300 வீடுகள், 100 ஐ போன்… தனது காதலியின் பிறந்தநாளுக்கு பல கோடி பரிசுகளை அறிவித்த பண மோசடி மன்னன்…

By Meena on ஆகஸ்ட் 12, 2024

Spread the love

டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட பணம் மோசடி வழக்கில் குற்றவாளி என்று கூறப்படுபவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் நடிகர் ஜாக்குலின் காதலர் என்று கூறி வருகிறார். அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் வாங்கவே பண மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 120b (குற்றச்சதி) மற்றும் பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் ஆகிய மோசடிகளால் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு கீழ் சுகேஷ் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பம்பாய் உயர்நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

   

   

இந்த வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னால்டசுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஜாக்குலின் அவர்களுக்கு பரிசுகளை வாங்கவே சட்டவிரோத பணத்தை அவர் பயன்படுத்தியதாக குற்ற பத்திரிக்கை கூறுகிறது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.

 

தற்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு படகு ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சுகேஷ். அந்த படகிற்கு லேடி ஜாக்குலின் என்று பெயரிட்டுள்ளார். படகுக்கான அனைத்து பணமும் வரிகளும் செலுத்தப்பட்டு விட்டதாகவும் அது முற்றிலும் முறையானது என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

அடுத்ததாக நடிகை விலங்குகள் நலனில் பெரிதும் ஈடுபட்டுள்ளதால் பெங்களூரில் ஜாக்குலினுக்கு பரிசளிக்க செல்லப்பிராணி மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் சுகேஷ் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை ஜாக்குலின் பிறந்தநாளை மேலும் சிறப்பாக்க வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 15 கோடி நிவாரண பணிகளுக்கு நன்கொடை வழங்குவதாகவும் 300 வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும் சுகேஷ் கூறியுள்ளார்.

இது தவிர ஜாக்குலின் நடித்த ‘இம்மி இம்மி’ பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியதற்காக அவரது ரசிகர்களில் 100 பேரை தேர்ந்தெடுத்து 100 பேருக்கு ஐ போன் 15 ப்ரோவையும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர். இவர் கோடிக்கணக்கில் பரிசுகளை அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.