பீகார் மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்த பல்லவி என்பவருக்கும் சன்னி என்பவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், தன்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுமாறு பல்லவி தன் கணவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு சன்னி சம்மதிக்காமல் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளதை அடுத்து, ஆத்திரமடைந்த பல்லவி தன் கணவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு, அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ தன் கணவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி, அதை மறைக்கக் காவல் நிலையத்திற்குச் சென்று நாடகமாடியுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் கூர்மையான விசாரணையின் போது சன்னியின் கழுத்தில் இருந்த காயங்களின் தழும்புகள் உண்மையைப் போட்டுடைத்தன. 5 மாதத் திருமண வாழ்க்கையில் மருத்துவக் கனவுக்காகக் கணவரையே மனைவியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
