‘எந்த மொழியில் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை’…..நடிகர் விக்ரம் எமோஷனல் வீடியோ…உள்ளே…

By Begam

Published on:

நடிகர் விக்ரம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனம் திறந்து பேசிய எமோஷனல் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது . இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

   

நடிகர் விக்ரம் இப்படத்தில் ‘ஆதித்ய கரிகாலன்’ கதாபாத்திரத்தை ஏற்று மிக சிறப்பாக நடித்துள்ளார். இக்கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் விக்ரம் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எந்த மொழியில் நான் நன்றியை சொல்வது என்று தெரியவில்லை .’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் மிக்க நன்றி.

நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நான் என்னுடைய படங்களில் என்னுடைய கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுவேன். அனால் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். இயக்குனர் மணிரத்னம் சார் அவர்களுக்கும் , காஸ்ட்டியும் டிசைன் செய்தவர்களுக்கும், படக்குழுவினருக்கும்  என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar