“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்… கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்…” பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த பெ.சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழிவான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளைஞர்கள் சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் புதிய பக்கம் ஒன்றை ஆரம்பித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறுகிய காலத்திலேயே மில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களை ஈர்த்து இணையத்தில் பெரும் ட்ரெண்டாக மாறிய அந்தப் பக்கம், தற்போது திடீரென முடக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ.சண்முகம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள்; அதைப்போல ‘கரப்பான் பூச்சி’ என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை அலறித் துடிக்க விட்டிருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தங்களை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையையே ஆயுதமாக்கி, இளைஞர்கள் ஆட்சியாளர்களுக்குத் தங்களது பலத்த எதிர்ப்பைத் திருப்பித் தாக்கியுள்ளனர் என்றும், போராட்ட வடிவத்தை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.