இப்படி ஒரு ஆட்சி தேவையா..? பெண்கள் பாதுகாப்பு பூஜ்ஜியம்… பழைய ட்வீட்டை தூசி தட்டி திமுக அட்டாக்..!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்தத் தவறிவிட்டது என திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு குறித்து விஜய் பதிவிட்ட பழைய ட்வீட் ஒன்றை தற்போது அவர் மறுபதிவு செய்துள்ளார். தற்போதைய தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த விவாதத்தை அவர் சமூக ஊடகங்களில் முன்னெடுத்துள்ளார்.

விஜய்யை நேரடியாகச் சாடியுள்ள சரவணன், தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.