சென்னையில் காதல் திருமணப் பிரச்சினையில் முதியவர் மற்றும் சமூக ஆர்வலரைத் தாக்கிய காவல்துறை இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு ஆதரவாகச் செயல்பட்ட சமூக ஆர்வலரை இன்ஸ்பெக்டர் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு வைரலாகியும் பரவின.
இச்சம்பவத்தைக் கண்டித்து, தவெக MLA தாமு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் நேரில் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையிலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பில் எழுந்த பலத்த எதிர்ப்பை அடுத்து, தற்போது இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி மீது காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
