தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளும் தவெக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மோதல் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவுக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தவெக தரப்பினர் சரியாகக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, “திமுக கூட்டணியில் நாம் அமைதியாக இருந்தது போல இங்கும் அமைதியாக இருக்கக் கூடாது; கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது” என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மனக்கசப்புதான், அண்மையில் நடைபெற்ற கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்காததற்கும் மிக முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே ஆளுங்கூட்டணிக்குள் இத்தகைய பிளவுகள் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
