ரொம்ப பயமா இருக்கு.. “தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்” எப்போது வீடு திரும்புவோம்..? அபுதாபியில் சிக்கிய இந்திய இளைஞரின் கண்ணீர் வீடியோ..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் சிக்கியுள்ள இந்திய இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஷு அரோரா என்ற அந்த இளைஞர், பெங்களூரு செல்லும் விமானத்தில் கேபின் குரூவாகப் பணியாற்றி வருகிறார். ஒரு சிறிய இடைவேளைக்காக (layover) அபுதாபியில் தங்கியிருந்தபோது, போர் காரணமாக திடீரென அனைத்து விமானப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கேயே சிக்கிக்கொண்டார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Ashu NB Arora (@flyhighwithashu)

தனது வீடியோவில் அங்குள்ள தற்போதைய கள நிலவரத்தைப் பகிர்ந்துள்ள ஆஷு, ஊடகங்கள் செய்திகளைப் பெரிதுபடுத்துவதாகப் பலர் கூறினாலும், உண்மையில் நிலைமை அதையும் விடக் கொடூரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அபுதாபி தெருக்களில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும், மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார். குறிப்பாக, தனது தலைக்கு மேலேயே ஏவுகணைகள் கடந்து செல்வதைக் காண்பது மிகவும் பயங்கரமான அனுபவமாக இருப்பதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

   

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உணவு மற்றும் தங்குமிடம் இன்றித் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வரவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், போர்ப் பதற்றத்தால் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.