லிங்கை தொட்டதும் மொத்த பணமும் காலி.. உங்க போனுக்கு இது மாதிரி மெசேஜ் வருதா?… அலார்ட்டா இருங்க மக்களே..!

By Nanthini on ஆனி 21, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக செல்போன்களில் மக்களை ஏமாற்றும் வகையில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நாம்தான் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும். இப்படியான நிலையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில் என்பவருடைய மனைவி ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதால் அபராதம் செலுத்த கோரி செந்தில் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த லிங்கை அவர் தொட்டவுடன் செல்போன் ஹேங்க் ஆகியுள்ளது. அதன் பிறகு செல்போனை ஆப் செய்து விட்டு ஆன் செய்ததும் அவருடைய வங்கியில் இருந்த 12,600 ரூபாய் பணமும் மொத்தமாக காணாமல் போய்விட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலி லிங்குகளை கிளிக் செய்து மோசடி வளையில் சிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.