Connect with us

CINEMA

“அப்பா.. அப்பா” என தங்களது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத மகன்கள்.. நெஞ்சை உலுக்கும் காட்சி…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து, மக்கள் மனதில் குடி கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். தனது 71 வயதில் இன்று அவர் நம்மை விட்டு பிரிந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார்.  நடிகர் விஜயகாந்த் மதுரையில் 1952 இல் பிறந்தவர் விஜயராஜ் என்ற தனது பெயரை சினிமாவிற்காக விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டார்.

#image_title

   

சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் 1979 இல் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த அகல்விளக்கு, நீரோட்டம், தூரத்து இடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சட்டம் ஒரு இருட்டறை ,வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் என்று இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா திரைப்படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமலஹாசனுக்குடப் கொடுத்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கால் பதித்து கலக்கிய சிங்கம் தான் நம் கேப்டன்.

Vijayakanth

ஒரு சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று இவ்வுலகை விட்டு பிரிந்த்துள்ளார். இந்நிலையில் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் கதறியழும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயகாந்தின் 2 மகன்களும் தங்களது தந்தையின் உடலை பார்த்து அழும் காட்சி நம் மனதை உலுக்குகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top