மாறிய படுக்கை… மாமியாருக்குப் பதில் மருமகள் மீது பாய்ந்த 4 குண்டுகள்… கொழுந்தனின் காதல் திருமணத்திற்குப் பலியான அண்ணி..!!

Spread the love

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் சாகேப்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட கோடா கிராமத்தில், காதல் திருமணம் தொடர்பான தகராறில் மீனா தேவி (35) என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் பெண்ணின் கொழுந்தன் சுதீர் பாஸ்வான், அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாஸ்வான் என்பவரின் மகளைக் காதலித்து, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை ரஞ்சித் பாஸ்வான், பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், ரஞ்சித் பாஸ்வான் துப்பாக்கியுடன் சுதிரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு சுதிரின் தாய் வழக்கமாகப் படுக்கும் கட்டிலில், அன்று இருட்டில் அடையாளம் தெரியாமல் மீனா தேவி படுத்திருந்தார். சுதிரின் தாய் என்று தவறாக நினைத்து ரஞ்சித் பாஸ்வான் அந்தப் பெண் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 குண்டுகள் பாய்ந்து மீனா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்று இரவு படுக்கையை மாற்றியதால் சுதிரின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வருவதற்குள் கொலையாளி ரஞ்சித் பாஸ்வான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் (FSL) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரஞ்சித் பாஸ்வானை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

6 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

6 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

7 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

7 மணத்தியாலங்கள் ago