நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 30 வயது இளம் நடிகை…. வழக்கில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்…. கைது செய்யப்பட்ட கணவர்….அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

By Begam

Published on:

நடிகை ரியாகுமாரி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அவரது கணவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகை ரியாகுமாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் ,அவருடைய கணவரின்  கண்முன்னே  சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை இஷா அலி என அழைக்கப்படும் ரியா குமாரி. இவர், தனது கணவரும் பிரபல திரைப்படத்தயாரிப்பாளருமான பிரகாஷ் குமார் மற்றும் 3 வயது மகளுடன் ராஞ்சியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய காரை வழி மறித்த மூன்று மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையத்தனர்.

அது மட்டுமின்றி ரியாகுமாரி பொருட்களை கொடுக்க முரண்டு பிடித்ததால், அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த நடிகை ரியா குமரியை அவரது கணவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். மேலும் ரியாகுமாரின் பெற்றோர் அவரின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறிய நிலையில், சந்தேகத்தின் பேரில் ரியாக்குமாரியின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்தவர் சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படும் நிலையில் அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது சந்தேகத்தின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் நடிகையின் கொலைக்கும் அவரது கணவருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர் போலீசார். தனது கணவனாலேயே நடிகை ரியாகுமாரி கைது செய்யப்பட்டாரா? என்று தற்பொழுது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.