பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் வைஷ்ணவி அவர்களும் ஒருவர்.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2 ” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. மேலும், பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான “மலர்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி.
நடிகர் சந்தானம், நடித்திருந்த “சபாபதி” படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி அவர்கள். சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்.