வெளிநாட்டில் வேலை என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கும். கை நிறைய பணம் கொடுத்து, வயிறு நிறைய சாப்பாடு போட்டு, வசதியான இடம் கொடுத்து இருந்தாலும் குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் கூற முடியாது. எப்போது தன் உறவுகளை பார்ப்போம் என்று தவிப்புடன் அவர்களது நாட்கள் நகரும். குடும்ப உறவுகளும் தங்கள் வீட்டு குழந்தையை எப்போது பார்ப்போம் என்ற அதிகரிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும்.
அதிலும் திருமணம் முடிந்து மனைவியை விட்டு பிரிந்து செல்லும் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உணர்வுகளை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது மட்டுமா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நம் வீட்டில் ஏதாவது துயர சம்பவம் நடந்தால் கூட உடனடியாக நம்மால் கிளம்பி வரக் கூட முடியாமல் தவிக்கும் தருணங்கள் அப்படி வாழ்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அப்படித்தான் இங்கே தன் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதால் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி விட வந்துள்ளார் மனைவி. அப்போது சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு மனைவி கண்ணீர் விட தொடங்குகிறார். அவரை கட்டி அணைத்து தழுவும் அந்த காட்சிகள் காண்பவரை கலங்க வைக்கின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.