பெற்றோர்களை பிரிய முடியாமல்….. கண்ணீருடன் பிரிந்து செல்லும் மணப்பெண்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

By admin

Published on:

திருமணமான கையுடன் மணப்பெண் மணமகனுடன் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் உள்ள பண்பு. எந்த மதமாக இருந்தாலும் ஆணுடன் பெண் சென்று வாழ வேண்டும் என்பது மாறாமல் தற்போது வரை இருக்கின்றது.

அதனால் எந்த திருமண வீட்டில் பார்த்தாலும் மணப்பெண் பிறந்த வீட்டாரை பிரிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் முன்பு பிறந்த வீட்டை நினைத்து அழுவதும், பிறந்த வீட்டார்கள் தங்கள் வீட்டில் பாசமாக வளர்த்த பெண் வேறொரு வீட்டிற்கு செல்ல போகிறார் என்பதை அறிந்து கண்ணீர் விடுவதும் வழக்கம்.

   

இதனை பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொரு பெண்களும் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அதை எண்ணி அழுவதுண்டு. அந்த பெண் மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரர் , சகோதரி என்று அனைவரும் அழுவார்கள். பின்னர் புகுந்த வீட்டில் இருப்பவர்கள் நாங்கள் உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி அழைத்து செல்வார்கள்.

அப்படிதான் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் திருமணம் முடிந்த பெண் ஒருவர் பிறந்த வீட்டாரை பிரிவதை எண்ணி கதறி கதறி அழுதார். அவரை பலர் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானமாகவில்லை. மணப்பெண் தனது தாய். தந்தை ஆகியோரை கட்டி தழுவி அழும் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பார்க்க கண் கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

author avatar