நமது மக்களின் சமூர்த்தாயபடி திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது.
சில இடங்களில் மாப்பிள்ளை,மணப்பெண் , இவர்கள் இருவரும் சேர்ந்து நடுரோட்டில் அழகாக செம குத்தாட்டம் போடுவதும் இப்போது ட்ரென்ட் ஆகிவிட்டது. இதனை அவர்களின் சொந்தங்கள் சுற்றி பார்த்து உற்சாகம் அடைந்தனர் ,இதில் ஒருவர் அதனை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த பதிவானது அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,இதோ அந்த பதிவு .,