விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார்.
தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷாவிற்கும் மறுபடியும் மூச்சு திணறல் ஏற்பட்டு பிக் பாஸ் வீடு பெரும் பரபரப்பில் உள்ளது.
தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் மூச்சு எடுக்க முடியாமல் கடும் குளிரில் நடுங்குகின்றார். அவருக்கு மூன்றாவது முறையாக இப்படி ஏற்பட்டுள்ளது. தற்போது வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடிக்கடிக்கு இவருக்கு இவ்வாறு ஏற்படுவதால் இவர் பிக் பாஸில் தொடர்ந்து இருப்பாரா இல்லை வெளியேறி விடுவாரா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.