நீண்ட இடைவேளைக்குப் பிறகு… அண்ணனுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்ட அனிதா விஜயகுமார்…. வைரலாகும் கியூட் கிளிக்ஸ்…

By Archana

Published on:

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

   

தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன. மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள்.

இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அனிதா தன்னுடைய சகோதரர் அருண் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் இணைந்து சிறிய சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Anitha Vijayakumar (@anits1103)

author avatar
Archana